தற்போதைய செய்திகள்

சிறுவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்... வட மாநில இளைஞரை கட்டி வைத்து அடித்த பெற்றோர் - விசாரணையில் வெளியான பகீர் உண்மை

தந்தி டிவி

தேனி மாவட்டம் போடி அருகே சிறுவர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி, பொய்யான தகவல் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் போடி சில்ல மரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர், பள்ளிக்கு செல்லாமல் சுற்றித்திரிந்துள்ளனர். அவர்கள், பெற்றோர்களிடம் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கடத்த முயற்சித்ததாகவும், தாங்கள் தப்பி வந்ததாகவும் பொய்யான தகவலை பரப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் , அதே பகுதியில் போர்வை விற்று திரிந்த வட மாநில வியாபாரி ஒருவரை கம்பத்தில் கட்டி அடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மாணவர்கள் உரிய முறையில் வழிநடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய போலீசார், இனி இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பினால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் வட மாநில இளைஞரை தாக்கியவர்கள் குறித்தும் போலீசர் விசாரித்து வருகின்றனர். 

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்