தற்போதைய செய்திகள்

திருடிய வீட்டிலேயே சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டு சென்ற சோத்துமூட்டை திருடன் | Theft | Food

தந்தி டிவி

திருடிய வீட்டிலேயே சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டு சென்ற சோத்துமூட்டை திருடன்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, கொள்ளையடித்த வீட்டிலேயே சாவகாசமாக உணவருந்திச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளியான ராமலிங்கம் என்பவர், சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றார். அதன் பிறகு, பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்