தற்போதைய செய்திகள்

ஆடு, கோழிகளை திருடிய இளைஞர்... தட்டிக்கேட்ட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம் - தென்காசியில் பயங்கரம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மாவடிக்கால் பகுதியை சேர்ந்தவர் சாமி. இவர் மங்களப்புரத்தில் உள்ள பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த தோட்டத்தில், அகரகட்டு பகுதியை சேர்ந்த ஜோசப் - லில்லி தம்பதி, தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், இருவரையும் அவருடைய மகன் பெஞ்சமின் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு வந்து செல்லும் போது, செலவுக்கு பணம் கேட்டு பெற்றோருடன் தகராறு செய்யும் பெஞ்சமின் , தோட்டத்திலிருந்து, ஆடு, கோழி மற்றும் தேங்காய்களை விற்று பணம் பார்த்து வந்திருக்கிறார். இதை தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த சாமி, கண்டித்த நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அருகில் இருந்த நொங்கு வெட்டும் அரிவாளை வைத்து சாமியை சரமாரியாக வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த பெஞ்சமினை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு