தற்போதைய செய்திகள்

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை... ரூ.1.22 கோடியை சுருட்டிய பைனான்சியர் - எஸ்கேப் ஆன மனைவி

தந்தி டிவி

கரூரை சேர்ந்த தம்பதி கிருஷ்ண மூர்த்தி மற்றும் மணிமேகலை. இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்த நிலையில், தங்களிடம் பணம் டெபாஸிட் செய்தால், அதிக வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி, நர்மதா என்பவர் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை நிறுவனத்தில் மூதலீடு செய்துள்ளார். இதில், முதலீடு செய்த பணத்தை இருவரும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், நர்மதா போலீசில் புகாரளித்துள்ளார். இதனடிப்படையில், விசாரணை நடத்திய போலீசாருக்கு, நிறுவனத்தில் பண முதலீடு செய்த 27 பேரிடம் சுமார் 1 கோடியே 22 லட்சம் வரையில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்