தற்போதைய செய்திகள்

கலெக்டர் முன் திடீரென தீக்குளிக்க முயன்ற பெண்கள்... கூட்டத்தில் பரபரப்பு

தந்தி டிவி

கடலூரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற மனு நீதி முகாமில், பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, வரம்பனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக இருந்து வரும் ராதிகா, மகேஸ்வரி ஆகியோர், தங்களை வேண்டுமென்றே ஊராட்சி மன்றத் தலைவர் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், அதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். அப்போது மனு அளிக்க முடியாததால் விரக்தியடைந்த அவர்கள் இருவரும், தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்றினர். 

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு