தற்போதைய செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு சென்ற தன்னார்வலர் மாயம்.. ஈஷா யோகா மையம் போலீசில் புகார்

தந்தி டிவி

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் என்ற சுவாமிபவத்துதா. இவர் கடந்த ஈஷா யோக மையத்தில் தங்கி இருந்து, தன்னார்வ தொண்டு செய்து வருகிறார்‌. கடந்த மாதம் 28ம் தேதி, ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்டு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். ஆனால், 3 நாள் ஆகியும் ஈஷா யோக மையத்திற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, ஈஷா யோக மையம் தரப்பில், அவரது உறவினர்களிடம் கேட்டபோது, யாரையும் தொடர்புகொள்ளவில்லை என தெரியவந்தது. காணாமல் போன கணேசனை கண்டுபிடித்து தருமாறு, ஈஷா யோக மையம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்