தற்போதைய செய்திகள்

"கால்ல விழுந்தாவது ஹெல்ப் பண்றேன்" - எஸ்ஐ மக்களிடம் பேசிய வீடியோ வைரல்

தந்தி டிவி

திருடனைக் கூட மன்னித்து விடுவேன், ஆனால், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை மன்னிக்கவே மாட்டேன் என்று காவல் உதவி ஆய்வாளர் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர்பேட்டை அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் சென்றபோது, அங்கு மாணவர்கள் வருகை குறைவாக இருப்பது குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு, அந்தப் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்குச் சென்ற உதவி ஆய்வாளர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்