தற்போதைய செய்திகள்

அட்வான்ஸ்-யை திருப்பி கேட்ட வாடகைதாரர்.. தர மறுத்த வீட்டின் உரிமையாளர்.. முற்றிய மோதலால் ஏற்பட்ட சோகம்

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட வாடகைதாரரை வீட்டின் உரிமையாளர் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

செங்கல்பட்டு மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பாரதி நகரில் நரேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வாடகைக்கு வசித்து வந்துள்ளார். அந்த வீட்டில் கழிவு நீர் செல்ல வழியில்லாததால், வீட்டை காலி செய்த சந்திரசேகர் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில், அட்வான்ஸை திருப்பி தர நரேஷ் மறுத்த நிலையில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், செங்குன்றம் சந்திப்பு சாலையில், இரவு பணி முடிந்து வீடு திரும்பும் தன் மகளை அழைத்து செல்ல சந்திரசேகர் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நரேஷ் சந்திரசேகரை சராமாரியாக தாக்கி தப்பிச்சென்ற நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் அடிப்படையில், நரேஷை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்