தற்போதைய செய்திகள்

கட்டிப் பிடித்த அடுத்த நொடியே.. தோழியை சுட்டு கொன்ற மாணவன்! - அதன் பிறகு ஹாஸ்டலில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி

கான்பூரைச் சேர்ந்த 21 வயது மாணவியை அம்ரோஹாவைச் சேர்ந்த பிஏ 3ம் ஆண்டு படிக்கும் அனுஜ் சிங் என்ற மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். 2 பேரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என கூறப்படும் நிலையில், ஒருவேளை காதல் பிரச்சினையாக இருக்குமோ எனவும், அந்த மாணவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் உணவு அறைக்கு வெளியே இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில், அங்கு அவர்கள் பேசுவதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்ததாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அனுஜ் அந்த மாணவியை சுட்டு விட்டு ஆண்கள் விடுதியில் உள்ள தனது அறைக்கு விரைந்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியும் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்