தற்போதைய செய்திகள்

கட்டிப் பிடித்த அடுத்த நொடியே.. தோழியை சுட்டு கொன்ற மாணவன்! - அதன் பிறகு ஹாஸ்டலில் நடந்த பயங்கரம்

தந்தி டிவி

கான்பூரைச் சேர்ந்த 21 வயது மாணவியை அம்ரோஹாவைச் சேர்ந்த பிஏ 3ம் ஆண்டு படிக்கும் அனுஜ் சிங் என்ற மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். 2 பேரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என கூறப்படும் நிலையில், ஒருவேளை காதல் பிரச்சினையாக இருக்குமோ எனவும், அந்த மாணவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் உணவு அறைக்கு வெளியே இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில், அங்கு அவர்கள் பேசுவதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்ததாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அனுஜ் அந்த மாணவியை சுட்டு விட்டு ஆண்கள் விடுதியில் உள்ள தனது அறைக்கு விரைந்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியும் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்