தற்போதைய செய்திகள்

7 வயது சிறுவனுடன் ஏடிஎம்-யை கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள்

தந்தி டிவி

ஆந்திராவில், 7 வயது சிறுவனுடன் சென்ற கும்பல், கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்டிஆர் மாவட்டத்தில் உள்ள திருவூரில், கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுத்து செல்ல, 7 வயது சிறுவனுடன் கொள்ளையர்கள் வந்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தின் மூடியை மட்டுமே உடைக்க முடிந்த நிலையில், லாக்கரில் இருக்கும் பணத்தை எடுக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுதொடர்பான தகவலின் பேரில் வந்த போலீசார், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்