தற்போதைய செய்திகள்

புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்... ஆத்திரத்தில் மக்கள் செய்த செயல்

தந்தி டிவி

ராமநாதபுரத்தில், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் அருகே உள்ள முனியன் வலசை கிராமத்தைச் சேர்ந்த +2 பயிலும் மாணவரும், சாத்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்த அதே பள்ளியில் பயிலும் +2 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவனின் இல்லத்திற்குச் சென்ற மாணவியின் உறவினர்கள் சிலர், மாணவரை தாக்கி செல்போனை பறித்துக்கொண்டு ஊர் மக்களை தரக்குறைவாக பேசிவிட்டதாக, காவல்நிலையத்தில் முனியன் வலசை கிராமத்தினர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி,100-க்கும் மேற்பட்டவர்கள் கேணிக்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை