தற்போதைய செய்திகள்

திரைப்பட தயாரிப்பாளரை கடத்திய நபர்கள்.. காரணம் என்ன?விசாரணையில் வெளிவந்த உண்மை

தந்தி டிவி

சத்தியமங்கலத்தில், திரைப்பட தயாரிப்பாளரை கடத்திய மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற திரைப்பட தயாரிப்பாளர், சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கரிகாலன், கார்த்திகேயன் ஆகியோரை திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, இரண்டரை லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது. பின்னர், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறித்த கரிகாலன், கார்த்திகேயன் ஆகியோர், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் என்பவருடன் இணைந்து கிருஷ்ணகிரி அருகே கிருஷ்ண பிரசாந்த்தை காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை அருகே வாகன தணிக்கையில் இருந்த போலீசார், தயாரிப்பாளரை கடத்திச் சென்ற காரை மடக்கி பிடித்தனர். பின்னர், தயாரிப்பாளரை கடத்திய மூவரையும் சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை