விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக விமானத்தின் அவசரகால கதவைத் திறந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார்... லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் சியாட்டிலுக்கு செல்வதற்காக ஏறிய ஒருவர், பணியாளர்கள் சொல்வதைக் கேட்காமல் அவசரகால கதவைத் திறந்துள்ளார்... இதையடுத்து அவரைக் கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.