தற்போதைய செய்திகள்

சாலையில் தோண்டப்பட்டுள்ள குழிக்குள் பைக்குடன் சேர்ந்து விழுந்த நபர் -அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள்

தந்தி டிவி

பழனி அருகே சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் பைக்கில் சென்ற நபர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயக்குடியில் இருந்து வரதாபட்டினம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. நேற்று இரவு பாப்பம்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவர் அவ்வழியே சென்ற போது வண்டியுடன் குழிக்குள் தவறி விழுந்துள்ளார்... அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காளிமுத்துவை பத்திரமாக மீட்டனர்... இதே போல் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்