தற்போதைய செய்திகள்

மாற்றுதிறனாளியை கட்டையால் சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்... நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியரை, 3 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க்கில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அப்போது, பணியில் இருந்து மாற்றுத் திறனாளி ஜெயராஜிடம், அந்த 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மாற்றுத் திறனாளியை கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியது. இதுதொடர்பான புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சரவணன் மற்றும் அப்புவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தங்கதுரையை தேடி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்