தற்போதைய செய்திகள்

ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்த முதியவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை..

தந்தி டிவி

கடலூர் அருகே ஆன்லைனில் வர்த்தகம் செய்து வந்த முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் 70 வயதான முதியவர் உத்திராபதி. சோடா வியாபாரியான இவர், பல ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்த நிலையில், அதில் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், உறவினர்கள் பலரிடமிருந்து கடன் பெற்று முதலீடு செய்திருந்ததால் மன உளைச்சலில் இருந்த உத்தராபதி வீட்டை விட்டு சென்ற நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், முதியவரை குடும்பத்தார் தேடி வந்த நிலையில், கீழ்செருவாய் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய படி முதியவர் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உயிரிழப்பு கொலையா?... தற்கொலையா ? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா