தற்போதைய செய்திகள்

நாட்டை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை.. "அதிகாலை 4.17-இல் இருந்து 4.38-க்குள்.." ஆன்லைன் வழியாக ஆஜராகிய டிஜிபி

தந்தி டிவி

கேரளாவில் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், குற்றவாளி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் வந்தனா தாஸ் கொல்லப்படுவது வரை, விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவமனையில் கொலை, வன்முறை உள்ளிட்ட அனைத்து சம்பவங்களும் அதிகாலை 4:17 மணிக்குத் தொடங்கி 20 நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் காவல் துறை சமர்ப்பித்துள்ளது. போலிசாரின் தகவலின்படி, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை என்றும் திடீர் தாக்குதலின்போது, குறுக்கிட்ட போலீஸ்காரர்களையும் அவர் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேரள மாநில டிஜிபி ஆன்லைன் வழியாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்