மாண்டஸ் புயல் காரணமாக திருப்பதியில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.. மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தபோதும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், திருமலையில் ஏழுமலையான் கோயில் வளாகத்தில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், திருமலைக்கு பக்தர்கள் வருகை குறைந்தே காணப்படுகிறது