தற்போதைய செய்திகள்

பட்டியல் சமூக இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரம்..கோவிலை இழுத்துப் பூட்டிய அதிகாரிகள் - கரூரில் பரபரப்பு

தந்தி டிவி

வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவிலைச் சுற்றியுள்ள 8 ஊர் கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த கோயில் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காளியம்மன் கோவிலுக்குள் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞரை சட்டையை பிடித்து கோவிலுக்குள் வரக்கூடாது என்று வெளியே தள்ளியிருக்கிறார்கள். சாமி கும்பிட்டு விட்டு திருநீர் கேட்ட போதும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் அதிகாரிகள் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, காளியம்மன் கோவில் தற்காலிகமாக இழுத்து பூட்டப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்