தற்போதைய செய்திகள்

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் - வெகுண்டெழுந்த ஊர் மக்கள் - புதுக்கோட்டையில் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் நீர்தொட்டியில் ஏறி போராடியவர்களை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இதர சமுதாய மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி நீர்தொட்டியில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த இதர சமுதாய மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வெளியூர் ஆட்களை வரழைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பிரச்சினையை தூண்டுவதாக குற்றம்சாட்டிய அவர்கள், இந்த பிரச்சினையில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தை, வாக்குறுதியை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்