தற்போதைய செய்திகள்

"வண்டி லேட்டா தான் வரும்..ஏறு இல்லனா போ" தெனாவட்டாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் - மாணவர்கள் பஸ்ஸை நிறுத்தியதால் பரபரப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, அரசுப் பேருந்து தாமதமாக வந்ததால், நடத்துனரிடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் அரசு பேருந்து, மருதன் கோன் விடுதி அரசு கல்லூரி வழியாக செல்வது வழக்கம். ஒரு மணி நேரம் பேருந்து தாமதமாக வந்ததால், கல்லூரி மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்