தற்போதைய செய்திகள்

குட்டி யானையை சித்திரவதை செய்த கும்பல்..விட்டுடுங்கன்னு மிரண்டு ஓடிய பரிதாபம்..!மனதை உலுக்கும் காட்சி

தந்தி டிவி

குட்டி யானையை சித்திரவதை செய்த கும்பல்..விட்டுடுங்கன்னு மிரண்டு ஓடிய பரிதாபம்..!மனதை உலுக்கும் காட்சி

அசாம் மாநிலத்தில் குட்டி யானையை ஒரு கும்பல் சித்ரவதை செய்யும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள லங்கா நகரின் ஹல்பகன் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை கிராம மக்கள் விரட்டி அடித்துள்ளனர். அப்போது வழிதவறி தவித்து தனியே நின்ற குட்டி யானையை அப்பகுதி மக்கள் விரட்டி விரட்டி துன்புறுத்தினர். தாயைப் பிரிந்து கண்ணீர் வடித்த குட்டி யானையை வாலைப் பிடித்து இழுத்தும், மனிதமே இல்லாமல் அடித்தும் கொடுமைப்படுத்தினர். தன் உயிரைக் காக்க அச்சத்தில் பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு ஓட முடியாமல் ஓடி அங்கிருந்து அந்த குட்டி யானை தப்ப முயன்ற வீடியோ இணையத்தை உலுக்கியுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு