தற்போதைய செய்திகள்

பிரபல ரவுடி பழிக்கு பழியாக வெட்டி படுகொலை...கொலையாளிகளை தீவிரமாக தேடும் போலீசார்

தந்தி டிவி

தூத்துக்குடியில் பழிக்கு பழியாக பிரபல ரவுடி ஒருவர், வீடு புகுந்து வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே சங்கரபேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மீது 3 மூன்று கொலை வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கும்பல், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2017-ம் ஆண்டு ஈஸ்வரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, கருப்பசாமி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தப்பி சென்ற 8 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்