தற்போதைய செய்திகள்

சந்திரபாபு நாயுடு உருவ பொம்மையை எரித்த ஓய்.எஸ்.ஆர் கட்சியினர்.. வெடித்த போராட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு

தந்தி டிவி

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் தெலுங்கு தேசம் மற்றும் ஓய்.எஸ்.ஆர் கட்சினர் மாறி மாறி போராட்டம் நடத்தியுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் குப்பம் முதல் இச்சாபுறம் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் எஸ்.சி எஸ்.டி பிரிவினர் குறித்து விமர்சனம் செய்ததாக கூறி ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் ஆகியோரின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பேரணியாக சென்றபோது, போலீசார் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், உருவ பொம்மைகளை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, குப்பம் காவல் நிலையம் முன்பு தெலுங்கு தேசம் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"