தற்போதைய செய்திகள்

நீதிமன்ற நுழைவு வாயில் மேலே ஏறி ஆட்டம் காட்டிய போதை ஆசாமி -பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

விழுப்புரம் நீதிமன்ற வளாக நுழைவு வாயிலின் மீது தீடீரென ஏறிய மர்ம நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பானது.

சுமார் 30 அடி உயரம் கொண்ட அந்த நுழைவு வாயிலின் மீது ஏறிய நபர் மது போதையில் இருந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்நபரை மீட்டனர்.

போலீசர் விசாரணை நடத்தையில், அவர் திருப்பாப்புலியூரை சேர்ந்தவர் அய்யனார் என்பது தெரியவந்தது.

மேலும், மயிலம் காவல்நிலைய ஆய்வாளர் தன்னிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து தொல்லை குடுப்பதாக குற்றஞ்சாட்டிய நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை