தற்போதைய செய்திகள்

நீதிமன்ற நுழைவு வாயில் மேலே ஏறி ஆட்டம் காட்டிய போதை ஆசாமி -பரபரப்பு சம்பவம்

தந்தி டிவி

விழுப்புரம் நீதிமன்ற வளாக நுழைவு வாயிலின் மீது தீடீரென ஏறிய மர்ம நபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பானது.

சுமார் 30 அடி உயரம் கொண்ட அந்த நுழைவு வாயிலின் மீது ஏறிய நபர் மது போதையில் இருந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அந்நபரை மீட்டனர்.

போலீசர் விசாரணை நடத்தையில், அவர் திருப்பாப்புலியூரை சேர்ந்தவர் அய்யனார் என்பது தெரியவந்தது.

மேலும், மயிலம் காவல்நிலைய ஆய்வாளர் தன்னிடம் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து தொல்லை குடுப்பதாக குற்றஞ்சாட்டிய நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு