தற்போதைய செய்திகள்

செல்போன் கடை ஓனரை தாக்கிய கஸ்டமர்.. மீண்டும் தந்தையுடன் வந்து எகிறி எகிறி அடித்த நபர் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

விருத்தாசலத்தில் செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே அசோக் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனை சர்வீஸ் செய்ய கொடுத்துள்ளார். இந்நிலையில், செல்போனை சர்வீஸ் செய்து கொடுக்க தாமதமானதாகக் கூறி, அந்த வாடிக்கையாளர் தகராறில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் தனது தந்தையுடன் கடைக்குச் சென்று, அதன் உரிமையாளரை நாற்காலி கொண்டு தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்