தற்போதைய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த குழந்தை..திடீரென நிகழ்ந்த சோகம்..

தந்தி டிவி

திருத்துறைப்பூண்டி அருகே நந்திமாங்குடி பகுதி சேர்ந்த புகழேந்தி-ஹேமலாதேவி தம்பதிக்கு, 2 வயதில் மது ஷாலினி என்ற பெண் குழந்தை இருந்தது. புகழேந்தி வேலைக்கு சென்றவுடன், ஹேமலாதேவி குழந்தையுடன் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது அருகில் உள்ள குளத்தில் மது ஷாலினி தவறி விழந்து உயிரிழந்தது தெரியவந்தது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்