தற்போதைய செய்திகள்

பாராட்டி பரிசு கொடுத்த மத்திய அரசு.. அப்படியே தூக்கி மக்களுக்கு தந்த கலெக்டர்.. சல்யூட் அடிக்க வைத்த செயல்..!

தந்தி டிவி

கேரளாவில், மாவட்ட ஆட்சியரின் நிர்வாகத் திறனை பாராட்டி மத்திய அரசு வழங்கிய பரிசு தொகையை, மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இந்தியாவின் 29 மாநிலங்களைச் சேர்ந்த 404 மாவட்ட ஆட்சியர்களில் சிறப்பாக செயல்படும் 18 மாவட்ட ஆட்சியர்களை தேர்வு செய்து மத்திய அரசு விருதும், பரிசுத் தொகையும் வழங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில், கேரளா மாநிலம், பத்தணந்திட்டா மாவட்டத்தின் ஆட்சியர் திவ்யா இடம்பெற்றுள்ளார்.

அந்த வகையில், அவருக்கு பரிசுத் தொகையாக 1 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த பரிசு தொகையை, மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் திவ்யா வழங்கியுள்ளார்.

தனது குடும்பத்தினரோடு சென்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பரிசுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"