தற்போதைய செய்திகள்

முன்னாள் - இன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய கார்.. சர்ச்சையில் சிக்கிய ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள்

தந்தி டிவி

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயன்படுத்தும் கார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படாமல் இயக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அரசு சார்பில் 2019ல் வழங்கப்பட்ட இனோவா காரை தற்போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயன்படுத்தி வருகிறார்.

இந்த காரின் எண், நம்பர் பிளேட்டிலும் எழுதப்பட்டு உள்ளது.

ஆனால், இதுவரை அந்த கார், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர்கள் பயன்படுத்தும் காரையே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், மூன்று ஆண்டுகளாக பதிவு செய்யாமல் இருப்பதும் அது சாலைகளில் இயக்கப்பட்டு வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்