தற்போதைய செய்திகள்

சிறுமியை எரித்து கொன்ற கொடூரர்கள் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தந்தி டிவி

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக, சிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமதுரை பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும், முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை, முருகன், கலியபெருமாள் ஆகியோர் எரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முருகன், கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"