தற்போதைய செய்திகள்

சிறுமியை எரித்து கொன்ற கொடூரர்கள் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தந்தி டிவி

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக, சிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமதுரை பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும், முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை, முருகன், கலியபெருமாள் ஆகியோர் எரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முருகன், கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி