தற்போதைய செய்திகள்

சிறுமியை எரித்து கொன்ற கொடூரர்கள் - நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

தந்தி டிவி

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக, சிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமதுரை பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும், முருகன், கலியபெருமாள் ஆகியோருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை, முருகன், கலியபெருமாள் ஆகியோர் எரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், முருகன், கலியபெருமாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்