தற்போதைய செய்திகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்த தரகர் அதிரடி கைது - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• ஐ.எஃப்.எஸ். பண மோசடி வழக்கில் முக்கிய தரகரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்... • ஐ.எஃப்.எஸ். என்ற நிறுவனம், 84 ஆயிரம் பேரிடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பெற்று, மோசடி செய்ததாக புகார் எழுந்தது. • புகாரின்பேரில் நிறுவனத்தின் இயக்குநர்களையும், தரகர்களையும் அடுத்தடுத்து கைது செய்துவரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்கியுள்ளனர். • இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த முக்கிய தரகரான ஹரிஹரனிடம் போலீசார் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர். • இதனைத் தொடர்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி ஹரிஹரன் மோசடியில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ