தற்போதைய செய்திகள்

"பனிக்குடம் உடைந்து வயிற்றுக்குள் இறந்து போன ஆண் குழந்தை“ - துக்கம் தாங்காமல் கதறிய தாய்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் - புவனேஸ்வரி தம்பதியினருக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில், தலைப் பிரசவத்திற்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்களிடம் தெரிவித்தும் அலட்சியத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு மீண்டும் அதிக வலி ஏற்படவே, அவசரமாக மருத்துவர்கள் குழந்தையை வெளியில் எடுத்தனர். அப்போது, பனிக்குடம் உடைந்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் குடும்பத்தினர் சோகமடைந்தனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே, குழந்தை இறந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்