தற்போதைய செய்திகள்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆத்திரத்தில் பா.ம.க MLA செய்த காரியம்

தந்தி டிவி

சேலத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏ. அருள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சாலை, கால்வாய் பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தபோது, அங்கு யாரும் இல்லாத நிலையில், அருள் மற்றும் பா.ம.க.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகளிடம் சரமாரி கேள்விகளை முன்வைத்தார். நீண்ட நேரமாக காக்க வைத்ததால் ஆத்திரத்தில் மனுவை அங்கேயே கிழித்தெறிந்தார். ​ஒன்றிய குழு தலைவர் கமிஷன் பெற்றுக்கொண்டு டெண்டர் விடுவதால் ஒப்பந்ததாரர்கள் தரமற்ற முறையில் திட்ட பணிகளை செயல்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்