தற்போதைய செய்திகள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதம்.. "யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை" - NIA கோரிக்கை

தந்தி டிவி

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்க கோரி நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு பயங்காரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக யாசின் மாலிக்குக்கு உள்ளிட்டோருக்கு எதிராக என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கை டெல்லி என்ஐஏ நீதிமன்றம், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை குற்றவாளி என கடந்த ஆண்டு மே 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதே நேரத்தில், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு மே 25-ஆம் தேதி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்க கோரி டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மே 29-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்