தற்போதைய செய்திகள்

சென்னையில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகள் - பின்னணியில் சிலை கடத்தல் மன்னன்..?

தந்தி டிவி

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளன.

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இவர் மீது 7 சிலை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே அவர் நடத்தி வந்த கலைக்கூடம் மூலமாக சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதில் கடந்த 2008 முதல் 2011 வரை ஷோபா துரைராஜன் என்பவர் 3 சிலைகளை வாங்கியது தெரியவந்தது. இதன்பேரில் அவர் வீட்டிற்கு சென்ற போலீசார் ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளை மீட்டனர்.

கலை பொருட்களை சேர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஷோபா துரைராஜனிடம் மேலும் 4 சிலைகள் இருப்பதும் தெரியவந்த நிலையில் மொத்தம் 7 சிலைகள் மீட்கப்பட்டன.

இதில் 3 சிலைகள் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்த நிலையில் அவற்றை கோயிலில் ஒப்படைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்