தற்போதைய செய்திகள்

சென்னையில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள கோயில் சிலைகள் - பின்னணியில் சிலை கடத்தல் மன்னன்..?

தந்தி டிவி

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து வாங்கப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் சென்னையில் மீட்கப்பட்டுள்ளன.

பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இவர் மீது 7 சிலை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே அவர் நடத்தி வந்த கலைக்கூடம் மூலமாக சட்டவிரோதமாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதில் கடந்த 2008 முதல் 2011 வரை ஷோபா துரைராஜன் என்பவர் 3 சிலைகளை வாங்கியது தெரியவந்தது. இதன்பேரில் அவர் வீட்டிற்கு சென்ற போலீசார் ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளை மீட்டனர்.

கலை பொருட்களை சேர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஷோபா துரைராஜனிடம் மேலும் 4 சிலைகள் இருப்பதும் தெரியவந்த நிலையில் மொத்தம் 7 சிலைகள் மீட்கப்பட்டன.

இதில் 3 சிலைகள் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்த நிலையில் அவற்றை கோயிலில் ஒப்படைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்