தற்போதைய செய்திகள்

4 வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட கோயில்-2 ஆண்டுகளாக புலம்பும் பக்தர்கள்..இதுவரை எந்த பயனும் இல்லை...

தந்தி டிவி

சீர்காழி அருகே நான்குவழி சாலைக்காக இடிக்கப்பட்ட குலதெய்வ கோயிலை விரைந்து கட்டிதர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காத்திருப்பு கிராமத்தில் இருந்த அறநிலையத் துறைக்கு சொந்தமான சின்னந்தி மாரியம்மன் கோயில், 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்டது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை, 37 லட்ச ரூபாய் ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கோயில் கட்டும் பணி நடைபெறாமல் இருப்பதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை ஒதுக்கிய நிதியைக் கொண்டு கோயிலை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி