தற்போதைய செய்திகள்

4 வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட கோயில்-2 ஆண்டுகளாக புலம்பும் பக்தர்கள்..இதுவரை எந்த பயனும் இல்லை...

தந்தி டிவி

சீர்காழி அருகே நான்குவழி சாலைக்காக இடிக்கப்பட்ட குலதெய்வ கோயிலை விரைந்து கட்டிதர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காத்திருப்பு கிராமத்தில் இருந்த அறநிலையத் துறைக்கு சொந்தமான சின்னந்தி மாரியம்மன் கோயில், 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்டது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறை, 37 லட்ச ரூபாய் ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கோயில் கட்டும் பணி நடைபெறாமல் இருப்பதாகக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை ஒதுக்கிய நிதியைக் கொண்டு கோயிலை விரைந்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ