தற்போதைய செய்திகள்

பிஸ்கட்டை தரையில் வீசி மாணவர்களை சாப்பிட சொன்ன ஆசிரியர் - பாய்ந்த அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களை தரக்குறைவாக நடத்திய ஆசிரியரை இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராசிபுரம் அடுத்த போடியநாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். இவர் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவர்களை கடைக்கு சென்று பண்டங்கள் வாங்கி வர கூறியதாகவும், அப்போது ஆசிரியர் கூறியதை சரியாக வாங்கி வராத ஆத்திரத்தில், பிஸ்கட்டை தரையில் வீசி மாணவர்களை சாப்பிட சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆசிரியர் மணிகண்டனை இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி உத்தரவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்