தற்போதைய செய்திகள்

பிஸ்கட்டை தரையில் வீசி மாணவர்களை சாப்பிட சொன்ன ஆசிரியர் - பாய்ந்த அதிரடி நடவடிக்கை

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களை தரக்குறைவாக நடத்திய ஆசிரியரை இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ராசிபுரம் அடுத்த போடியநாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். இவர் சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் படிக்கும் மாணவர்களை கடைக்கு சென்று பண்டங்கள் வாங்கி வர கூறியதாகவும், அப்போது ஆசிரியர் கூறியதை சரியாக வாங்கி வராத ஆத்திரத்தில், பிஸ்கட்டை தரையில் வீசி மாணவர்களை சாப்பிட சொன்னதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசாரும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆசிரியர் மணிகண்டனை இடைநீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்