தற்போதைய செய்திகள்

கர்நாடக போலீஸ் அடித்த அடியில் மனம் நொந்து எலி பேஸ்ட் சாப்பிட்ட தமிழக இளைஞர்..எழும்ப கூட முடியாமல் கதறி தவிப்பு

தந்தி டிவி

கர்நாடக போலீசார் விசாரணை என்ற பெயரில் 15 நாட்கள் தாக்கியதாக கூறி, திருப்பத்தூர் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூரை சேர்ந்த மனோஜ் என்பவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு விசாரணைக்காக கடந்த 5ஆம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், மனோஜை கர்நாடக போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று வீடு திரும்பிய மனோஜ், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உடனடியாக மனோஜ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கர்நாடக போலீசார் 15 நாட்கள் தாக்கியதாக மனோஜ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்