தற்போதைய செய்திகள்

இந்திய அணிக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் - திண்டுக்கலில் உற்சாக வரவேற்பு

தந்தி டிவி

உலக கோப்பை ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்ற, தமிழக வீரர், வீராங்கனைக்கு திண்டுக்கல்லில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், பூனேவில் கடந்த 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை, உலக கோப்பை ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய ஆண்கள் அணி இரண்டாமிடத்தையும், இந்திய பெண்கள் அணி மூன்றாமிடத்தையும் பெற்றது. இந்திய அணியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் மற்றும் சுஷ்மிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். குறிப்பாக பெண்கள் அணிக்கு சுஷ்மிதா கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போட்டியை முடித்து சொந்த ஊர் திரும்பிய இருவருக்கும், ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி