தற்போதைய செய்திகள்

செல்போன் மூலம் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து - அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் செல்போன் மூலம் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்ப பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் கூட்டரங்கில் பூஜ்ய குறைபாடு, பூஜ்ய விளைவு குறித்தான கருத்தரங்கு நடைபெற்றது. அதில், தமிழ்த்தாய் வாழ்த்து என அறிவிக்கப்பட்ட போது, யாரும் பாடலை பாட முன்வராததால், செல்போன் மூலம் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, வாயால் பாடவேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், ஆனால் அதனை மீறும் வகையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ