தற்போதைய செய்திகள்

செல்போனில் டார்ச்சர் செய்த இளைஞர்... திட்டம் தீட்டி போட்டுத்தள்ளிய பெண் - பழிக்குப்பழியாக தாய்,தந்தைக்கு நேர்ந்த சோகம்?

தந்தி டிவி
• சென்னை வண்டலூர் அருகே, மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ஜனகா ஆகிய இருவரும் சேர்ந்து, வண்டலூர் அடுத்த ஓட்டேரி அருகே மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். • காரில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல், தாங்கள் வைத்திருந்த கத்தியால் பார்த்திபன் மற்றும் ஜனகா ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். • இதில், பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜனகாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். • இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், பார்த்திபனின் 15 வயது மகளை, மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. • இதன் காரணமாக, பார்த்திபனின் மகள் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, பிரேம்குமாரை கொலை செய்ததால், பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு