தற்போதைய செய்திகள்

செல்போனில் டார்ச்சர் செய்த இளைஞர்... திட்டம் தீட்டி போட்டுத்தள்ளிய பெண் - பழிக்குப்பழியாக தாய்,தந்தைக்கு நேர்ந்த சோகம்?

தந்தி டிவி
• சென்னை வண்டலூர் அருகே, மீன் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் அவரது மனைவி ஜனகா ஆகிய இருவரும் சேர்ந்து, வண்டலூர் அடுத்த ஓட்டேரி அருகே மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். • காரில் வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல், தாங்கள் வைத்திருந்த கத்தியால் பார்த்திபன் மற்றும் ஜனகா ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். • இதில், பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜனகாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். • இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், பார்த்திபனின் 15 வயது மகளை, மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் செல்போன் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. • இதன் காரணமாக, பார்த்திபனின் மகள் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, பிரேம்குமாரை கொலை செய்ததால், பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை