தற்போதைய செய்திகள்

சத்து மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவிகள்...சிகிச்சைக்கு செல்லும் போது பாதியில் பிரிந்த உயிர் - வினையான விளையாட்டு..!

தந்தி டிவி
• ஊட்டியில் விளையாட்டாக சத்துமாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் கடந்த 6ம் தேதி குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து கொண்ட ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. • ஒருவருக்கு ஒரு மாத்திரை என வழங்கப்பட்ட நிலையில், பள்ளியில் சில பேருக்கு அதிகமான மாத்திரைகள் கிடைத்துள்ளது. • அப்போது, மாணவ மாணவிகள் சிலர், விளையாட்டாக போட்டி போட்டுக் கொண்டு, அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். • இதனால் 6 மாணவ மாணவிகள் மயக்கமடைந்தனர். • இதனையடுத்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. • இந்நிலையில் உடல் நிலை மிகவும் மோசமடைந்த ஜெய்பா பாத்திமா என்ற 8ம் வகுப்பு மாணவி அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். • அப்போது ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே சேலம் அருகே, சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்