நீதித்துறை தொடர்பாக அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருந்த நிலையில், அதனைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.
நீதித்துறை குறித்து எதிர்காலத்தில் அவமதிப்பு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என்றும் லலித் மோடிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.