தற்போதைய செய்திகள்

திடீரென ரயிலின் சக்கரங்கள் கழன்றதால் சென்னை சென்ட்ரலில் பரபரப்பு

தந்தி டிவி

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இரவு வந்த ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திரும்பும் போது ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் திடீரென கழன்றதால் நேற்று இரவு 12 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் சரிசெய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்த ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை