தற்போதைய செய்திகள்

சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழை. திடீரென உருண்டு விழுந்த பாறை.. பழனி முருகன் கோயிலில் பரபரப்பு..!

தந்தி டிவி

முருகன் கோயிலுக்கு கோடைகால நீர்தேக்கம், பாலாறு அணையில் இருந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் லிட்டர் தண்ணீர் பழனி மலை கோயிலுக்கு செல்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பாறை உருண்டு விழுந்ததில் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் சேதம் அடைந்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்பு பயன்படுத்தி வந்த குடிநீர் குழாய் மூலம் தற்போது குடிதண்ணீர் தற்காலிகமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோயில் ஊழியர்கள் உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்...

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு