தற்போதைய செய்திகள்

நொடிக்கு நொடி மாறும் வானிலை.. திடீரென தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை

தந்தி டிவி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக நேற்று கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது.

தமிழகத்தில் அக்னிநட்சத்திர வெயிலானது சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிந்தது. அதன்படி தேனியில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும், வைகை ஆறு உற்பத்தியாகும் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும், நெல்லையில் பாளையங்கோட்டை, பேட்டை, என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளிலும்,நாகையில் நாகூர், வேளாங்கண்ணி, வாஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்தது. மேலும் ஊட்டியில் அவலாஞ்சி, எமரால்டு, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளிலும் பரவலான மழை காணப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை