தற்போதைய செய்திகள்

எல்லையில் திடீரென துப்பாக்கிச் சூடு...7 மாவட்டங்களுக்கு இணைய சேவை முடக்கம் - தொடரும் பதற்றம்

தந்தி டிவி

அசாம் - மேகாலயா இடையே மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ என்ற இடத்தில், திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், அசாம் மாநில வன அதிகாரி உள்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவுவதாக, மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்கா தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்