தற்போதைய செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்ட அமைச்சர்

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில், தேரோட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு, தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் 2வது நாளில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு, பக்தர்கள் தங்கியிருக்கும் கொட்டகைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து தேரோட்ட நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு, தங்க தேரினை பக்தர்களுடன் சேர்ந்து வடம் பிடித்து இழுத்து, வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்