தற்போதைய செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்ட அமைச்சர்

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில், தேரோட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு, தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் 2வது நாளில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு, பக்தர்கள் தங்கியிருக்கும் கொட்டகைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து தேரோட்ட நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு, தங்க தேரினை பக்தர்களுடன் சேர்ந்து வடம் பிடித்து இழுத்து, வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"