தற்போதைய செய்திகள்

சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்ட அமைச்சர்

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில், தேரோட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு, தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் 2வது நாளில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இந்நிலையில், கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு, பக்தர்கள் தங்கியிருக்கும் கொட்டகைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து தேரோட்ட நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு, தங்க தேரினை பக்தர்களுடன் சேர்ந்து வடம் பிடித்து இழுத்து, வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்