தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி. மற்றும் எஸ்.எஃப்.ஐ. மாணவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.
மாணவர் சங்க தேர்தல் தொடர்பாக நடைபெற்ற இந்த மோதலில், மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர்.
இதனிடையே, ஏ.பி.வி.பி. அமைப்பின் பழங்குடியின மாணவர்களை, கடுமையான ஆயுதங்களை கொண்டு, எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் தாக்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.