தற்போதைய செய்திகள்

கெட்டிச் சட்னியோடு சேர்த்து கரப்பான் பூச்சியையும் கட்டி கொடுத்த கடை - பெற்றோர் அதிர்ச்சி

தந்தி டிவி

சேலத்தில் உணவில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவத்தில் விளக்கம் கேட்டு ஓட்டல் நிர்வாகத்துக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில்தெருவை சேர்ந்தவர் சங்கர்.

இவர் தன் குழந்தைக்கு தனியார் ஓட்டலில் இருந்து இட்லியும் சட்னியும் வாங்கி வந்துள்ளார்.

இதில் தேங்காய் சட்னியை சாப்பிட திறந்து பார்த்த போது அதன் உள்ளே கரப்பான் பூச்சி கிடந்தது தெரியவரவே அதிர்ந்து போனார் அவர்.

உடனே கடைக்கு அதை எடுத்து வந்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சோதனைக்கு சென்றனர்.

அப்போது அங்கே கரப்பான் பூச்சிகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஓட்டல் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?